கூலி கொலையாளிகளாக செயல்படும் ராணுவ கமாண்டோ முன்னாள் வீரர்கள்






 கூலி கொலையாளிகளாக செயல்படும் ராணுவ கமாண்டோ முன்னாள் வீரர்கள்

இலங்கையின் பிரபல பாதாள உலகக் குழு தலைவர்களில் ஒருவராக கருதப்படும் கெஹல்பத்தர பத்மே என்பவரினால் வழிநடத்தப்படும் பாதாள உலகக் குழுவில் ராணுவ கமாண்டோ படை பிரிவிலிருந்து தப்பிச் சென்ற 18 படை வீரர்கள், கூலி கொலையாளிகளாக செயல்பட்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட விசேட விசாரணைகள் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது இவ்வாறு பாதாள உலகம் குழு செயற்பாடுகளில் இணைந்து கொண்ட முன்னாள் கமாண்டோ படையினர் ஒன்பது பேர் பெஹலியகொட குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் படைவீரர்களை விளக்க மறையலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கெஹல்பத்தர பத்மே என்ற பாதாள உலக குழு தலைவரின் பிரதான சகாவான கமாண்டோ சலிந்த என்பவர் இந்த ராணுவ முன்னாள் ராணுவ வீரர்களை கொண்ட கூலிப்படையை உருவாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு கூலிப்படையினராக செயல்பட்டு வரும் முன்னாள் ராணுவ கமாண்டோ படை சிப்பாய்கள் அதிகமானவர்கள் போதை மருந்துக்கு அடிமையானவர்கள்

இந்த அடிப்படையில் இவர்கள் கூலிக்கு கொலைகள் செய்து வருவதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.




📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்