டிஜிட்டல் தரவு கட்டமைப்பின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (21) முதல் மே 23 ஆம் திகதி வரை ஊழிய சேமலாப நிதியத்தின் சேவைகள் நிறுத்தி வைக்கப்படும் என தொழிலாளர் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதன்படி, சேவைகளுக்கு முன்பதிவு செய்தவர்களுக்கு மே 23 ஆம் திகதி முதல் முன்னுரிமை அடிப்படையில் சேவைகள் மீண்டும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.