தெஹிவளை - நெடிமால பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடனும், கடந்த 19ஆம் திகதி கல்கிஸ்ஸையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடனும் படோவிட்ட அசங்க என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி தொடர்பு பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (19) மதியம் தெஹிவளை - நெடிமால பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள், பொலித்தீன் கடை உரிமையாளர் ஒருவரின் மகனை இலக்கு வைத்த துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
குறித்த துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை. இந்நிலையில், சந்தேக நபர்கள் வந்த மோட்டார் சைக்கிள் பின்னர் மீகொட களு வளதெனியா பகுதியில் உள்ள ஒரு நெல் வயலுக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆரம்பகட்ட விசாரணை
பொலித்தீன் கடையின் உரிமையாளரான பாக் காமினியின் மகனை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் பொலித்தீன் கடை உரிமையாளர் திட்டமிட்ட குற்றவாளியான படோவிட்ட அசங்கவின் உறவினர் என்பதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில், கல்கிஸ்ஸ கடற்கரை சாலையை சுத்தம் செய்து கொண்டிருந்த 19 வயது இளைஞரை துரத்திச் சென்று சுட்டுக் கொன்ற துப்பாக்கிச் சூடு நடத்தியவரும், மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் கல்கிஸ்ஸ பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலையில் தொடர்புடைய அனைத்து சந்தேக நபர்களும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மற்றும் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபரைத் தவிர, அவர்களுக்கு ஆதரவளித்த ஏனைய இரண்டு பேரும் குறித்த குற்றச்செயலுடன் தொடர்புடையவர்களாக கருதப்படுகின்றனர்
முன்னாள் விமானப்படை வீரர்
துப்பாக்கிச் சூடு நடத்தியவரிடம் இருந்து உள்ளூரில் தயாரிக்கப்பட்ட ஒரு கையெறி குண்டு, 15.9மிமீ தோட்டாக்கள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள் உரிமத் தகடுகள் ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டன. கொட்டாவ விஹார மாவத்தையில் கைது செய்யப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்தியவர் முன்னாள் விமானப்படை வீரர் என தெரியவந்துள்ளது.