ஐஸ் தயாரிப்பு இரசாயனங்கள் விவகாரம்: சுயாதீன விசாரணை தேவை - நாமல் ராஜபக்ச

 

மித்தெனியாவிற்கு வந்த ஐஸ் தயாரிக்கும் இரசாயனங்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்களும் துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்ட முந்நூறு கொள்கலன்களில் உள்ளதா என்பதை நாட்டுக்கு வெளிப்படுத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


இந்த விவகாரம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.


 

பொதுமக்கள் பாதுகாப்பு பிரதியமைச்சர் சுனில் வட்டகல, சிறு பிள்ளை போல நடந்து கொண்டதற்கு ராஜபக்ச வருத்தம் தெரிவித்தார்.


மேலும், இந்தக் கொள்கலன்கள் குறித்து பொலிஸாருக்கு முன்பே தகவல் கிடைத்ததா என்பதையும் நாட்டுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்