பிரேக் இல்லாத தொடருந்தை போல் நாடு: விமர்சிக்கும் முன்னாள் எம்.பி


 பிரேக் இல்லாத தொடருந்து பள்ளத்தில் போவது போல் நாடு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாது பள்ளத்தில் போவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர வித்தானகே தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் சர்வஜன அதிகாரம் கட்சியின் கூட்டத்தில் உரையாற்றும் போதே மேற் கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர்,

“இன்று அரசாங்கம் பாதுகாப்பு தொடர்பில் கணிப்பீடு நடத்துகிறது.

வாக்குறுதிகள் 

உயர் அரசியல்வாதிகள் பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கின்றனர். மக்கள் அதிகமாக வாக்களித்து இந்த அரசாங்கத்தை அமைத்துக் கொண்டனர்.

ஆனால் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் குவிக்கப்பட்டுள்ளன. கடந்த 40 வருடங்களாக இந்த நாட்டை வீணாக்கியவர்கள் ஜே.வி.பியினரும் விடுதலைப் புலிகளும் ஆவர்” எனத் தெரிவித்துள்ளார்.




📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்