இன்றையதினம் மூட்டை முடிச்சுகளுடன் மெதமுலனவிற்கு குடிபெயரும் மகிந்த குடும்பம்

 




ஜனாதிபதிகளுக்கான உரிமைகள் தொடர்பான சட்டமூலத்தை ரத்து செய்வதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் இன்று(10) நிறைவேற்றப்பட்ட நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பு 7, விஜேராமவில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறத் தயாராகி வருகிறார்.

அதன்படி, அவர் இன்றையதினம்(11) விஜேராமவில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேற உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தங்காலையிலுள்ள மெதமுலன இல்லத்திற்கு குடிபெயர்வு

அவர் தங்காலையிலுள்ள மெதமுலன இல்லத்திற்கு குடிபெயர உள்ளதாகவும் கூறப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பாதுகாப்பு காவலர்களுக்கு போதுமான வசதிகளை வழங்கக்கூடிய வீடு கொழும்பிற்கு அருகில் இல்லாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


 இதேவேளை, முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரும், இந்த சட்டத்தின் கீழ் உத்தியோகபூர்வ இல்லங்களை விட்டு வெளியேற்றப்படுவார்கள்.



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்