போதைவஸ்து பாவனையிலிருந்து இளைஞர் சமூகத்தை பாதுகாக்க ஊடகவியலாளர்கள் முன்வரவேண்டும் : மாநகரசபை உறுப்பினர் பாசித்



போதைவஸ்து பாவனையிலிருந்து இளைஞர் சமூகத்தை பாதுகாக்க ஊடகவியலாளர்களும் முன்வர வேண்டும் என அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் ஏ.எஸ்.பாசித் தெரிவித்தார்

சிலோன் ஜேர்னலிஸ்ட் போரத்தின் விசேட ஒன்றுகூடல் நிகழ்வு போரத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.எஸ்.எம்.ஜஃபர் தலைமையில் நேற்று (07) அக்கரைப்பற்று FN Beach Resort வளாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில்…

பாடசாலை மாணவர்களையும், இளைஞர்களையும் இலக்கு வைத்தே இன்று போதைப்பொருள் வியாபாரம் முன்னெடுக்கப்படுகிறது. இது சமூகத்தில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது, இளைஞர்களும் பாடசாலை மாணவர்களும் எமது எதிர்கால சந்ததியினர். அவர்கள் நாளைய தலைவர்கள் அந்தவகையில் எமது சந்ததியினரை போதைப்பொருளிலிருந்து பாதுகாப்பது எமது கடமையாகும்.

போதைப் பொருளில் இருந்து எமது இளைஞர்களையும் பாடசாலை மாணவர்களையும் பாதுகாப்பதற்கும் போதைப் பொருள் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் ஊடகவியலாளர்கள் முன்வர வேண்டும். குறிப்பாக போதைப்பொருளில் இருந்து எமது சமூகத்தை பாதுகாக்க சமூக நிறுவனங்களும், சமூக ஆர்வலர்களும் இன்று முன்வந்துள்ளனர். 

அந்த வகையில் அக்கரைப்பற்று பிரதேசத்தில் அக்கரைப்பற்று மாநகர சபையும் ஏனைய பொது அமைப்புக்களும் பல வழிகளிலும் இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. இந்த சந்தர்ப்பத்தில், இளைஞர்களின் வாழ்வையும் அவர்களின் குடும்பவியலையும் கருத்திற்கொண்டு துறைசார்ந்தவர்களும் உலமாக்களும் வழங்குகின்ற ஆலோசனை வழிகாட்டல்களை இச்சமூகத்தின் மத்தியில் கொண்டுசெல்ல வேண்டிய பாரிய பொறுப்பும் கடமையும் ஊடகவியலாளர்களுக்கு உள்ளது என்றார்.

இந்த நிகழ்வில் போரத்தின் பொதுச் செயலாளர் எஸ்.அஸ்ரப்கான், சிரேஷ்ட பிரதித் தலைவர் பீ.எம்.றஹ்மதுல்லா, பிரதித் தலைவர்களான கே.எல்.அமீர், றபீக் பிர்தௌஸ், உப தலைவர் ஏ.எல்.எம்.சினாஸ் உள்ளிட்ட உயர்பீட உறுப்பினர்கள், பொதுச்சபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்