அத்துடன், பிள்ளையானின் வேண்டுகோளின் பிரகாரம் பிள்ளையானுக்கு நெருக்கமாகத் தான் உள்ளிட்ட குழுவொன்று இராணுவப் புலனாய்வுத் துறையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந் ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
தற்போதைக்கு அசாத் மௌலானா வெளிநாட்டில் தலைமறைவாக வாழ்ந்து வரும் நிலையில் கடுமையான முயற்சிகளின் பின்னர் அரசின் முக்கி யஸ்தர்கள் அவருடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.
அதன் பிரதிபலனாக உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைக்கவும், அது தொடர்பில் விரிவான வாக்குமூலம் ஒன்றை வழங்கவும் அசாத் மௌலானா இலங்கை வர சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெகுவிரைவில் அவரை இலங்கைக்கு அழைத்து வரும் செயற்பாடுகளை அரசு முன்னெடுத்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.