அரசாங்கத்தை சீர்குலைக்க முயற்சித்து நேரத்தை வீணாக்க வேண்டாம்! அமைச்சர் பிமல்



தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கவிழ்ந்துவிடாது என்றும், அதன் ஐந்து ஆண்டு பதவிக்காலம் முடியும் வரை ஆட்சியில் இருக்கும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, தெரிவித்துள்ளார்.

பதவிக்காலத்திற்குப் பிறகு, அரசாங்கம் மக்கள் முன் சென்று ஆணையை கோரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சீர்குலைக்கும் முயற்சி

ஹம்பாந்தோட்டையில் ஊடகங்களுக்கு கருத்து  தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோர் அரசாங்கத்தின் சொத்துக்கள் என்றும், ஆளும் கட்சிக்குள் எந்தப் பிரிவுகளும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோரை விமர்சித்த அவர், அவர்களிடம் ஒற்றுமை இல்லை என்றும், அரசாங்கத்தை சீர்குலைக்க முயற்சித்து, நேரத்தை வீணாக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.




📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்