விமான நிலையத்தில் தீ வைத்த பயணி

 

இத்தாலியின் மிலன் நகரில் மால்பென்சா விமான நிலையத்தில் உடைமைகளை சோதனை செய்வதற்காக பயணிகள் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். 


அப்பொழுது விமான நிலைய ஊழியருக்கும் பயணிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 


இதனால் கோபமடைந்த பயணி, அவர் மறைத்து வைத்திருந்த சுத்தியலை எடுத்து கண்ணாடியை உடைத்து, அங்கிருந்த கவுண்டருக்கும் தீ வைத்துள்ளார். 


தகவலறிருந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் தீயை அணைத்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக இச் சம்பவத்தில் யாருக்கும் எதுவித காயமும் ஏற்படவில்லை. 


இருப்பினும் பயணியின் இச் செயலால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. 




📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்