சட்டமூலம் ஒன்றிற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்


முன்மொழியப்பட்ட ஜனாதிபதி உரிமைகள் ரத்து செய்தல் சட்டமூலம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என சப்ரகமுவ பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும் அரசியல் ஆய்வாளருமான மஹிந்த பத்திரண உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கடந்த 7 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த இந்த சட்டமூலம், சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு மறைந்த ஜனாதிபதிகளின் மனைவிமானுக்கும் வழங்கப்பட்ட சலுகைகளை ரத்து செய்ய முயல்கிறது.

பல அரசியலமைப்பு விதிகளை

இந்த சட்டமூலம் பல அரசியலமைப்பு விதிகளை மீறுவதாகக் கூறி, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை மற்றும் சர்வர் வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் தேவை என்று மனுதாரர் குறிப்பிடுகிறார்.

இதேவேளை, முன்மொழியப்பட்ட குறித்த சட்டமூலத்தை சவால்களுக்கு உட்படுத்தி இந்த மனுவுடன் மொத்தமாக இதுவரை ஆறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்