அரசாங்க பாடசாலைகளில் மாணவர்களை சேர்ப்பதில் ஏற்பட்டுள்ள மாற்றம்


 இலங்கையில் முதலாம் ஆண்டிற்கு அரசாங்க பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்க்கும் எண்ணிக்கை பாரிய அளவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 360,000 ஆக இருந்த முதலாம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை 2025ஆம் ஆண்டில் 298,000 ஆகக் குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதுவொரு ஆபத்தான வீழ்ச்சி என புதிய ஜனநாயக முன்னணி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

பாரிய வீழ்ச்சி

நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வி எழுப்பிய ரவி கருணாநாயக்க, அதனை சரி செய்ய அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அவர் குறிப்பிட்டார்.

அரசாங்க பாடசாலைகளில் மாணவர்களை சேர்ப்பதில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Grade 1 Students Decreased In Sri Lanka

பிறப்பு எண்ணிக்கையில் ஏற்பட்ட குறைவு இதற்கான பிரதான காரணமாகும். மேலும் கணிப்பின்படி, இந்த எண்ணிக்கை 2030 ஆம் ஆண்டுக்குள் 196,209 ஆக குறையலாம் என கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரட்ன குறிப்பிட்டுள்ளார்.

சீர் செய்ய நடவடிக்கை

கடந்த 05 ஆண்டுகளில் அரசாங்க பாடசாலைகளில் முதலாம் தரத்தில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டு 298,959 ஆகவும், 2022 ஆம் ஆண்டு 303,868 ஆகவும், இருந்தது

அரசாங்க பாடசாலைகளில் மாணவர்களை சேர்ப்பதில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Grade 1 Students Decreased In Sri Lanka

இந்த ஆபத்தான நிலையை சீர்செய்ய எவ்வாறான நடவடிக்கை எடுப்பது என்பது தொடர்பில் ரவி கருணாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்