புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வரைவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் நிலை

 

இலங்கையின் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வரைவதற்காக நியமிக்கப்பட்ட விசேட நிபுணர் குழு செப்டம்பரில் தனது பணியை நிறைவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்மொழியப்பட்ட சட்டமூலத்தில் திருத்தங்களை மறுஆய்வு செய்யும் இரண்டாம் கட்டத்தில் குழு தற்போது உள்ளது என அதன் தலைவர் ரியன்சி அர்சகுலரத்ன தெரிவித்தார்.

இரத்து

புதிய சட்டம் 1979 ஆம் ஆண்டின் தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அத்துடன் நவீன உலகளாவிய பயங்கரவாத அச்சுறுத்தல்களை நிவர்த்தி செய்வதையும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதையும், சர்வதேச தரங்களுக்கு ஏற்ப அமைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்