மத்திய கிழக்கு நாடுகளில் கடமைபுரிவோரின் ஊடாக கடந்த ஏழு மாதத்தில் 4.43 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு வருமானமாக கிடைக்கப் பெற்றுள்ளது


மத்திய கிழக்கு நாடுகளில் கடமைபுரிவோரின் ஊடாக கடந்த ஏழு மாதத்தில் 4.43 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு வருமானமாக கிடைக்கப் பெற்றுள்ளது.

அரசாங்கம் கடந்த வரவு செலவுத்திட்டத்தின் மூலம் எதிர்பார்த்த அரசாங்கத்தின் மொத்த வரி வருமானத்தையும் விட அதிகமான தொகையை மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்பெண்களாக வேலைபுரிவோர் உழைத்துக் கொடுத்துள்ளனர்.

கடந்த ஏழு மாதங்களில் இலங்கைக்கு நேரடி முதலீடாக வெறும் 507 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ளது.

கடந்த ஏழு மாத காலப்பகுதியில் சுற்றுலாத்துறை மூலம் 2.23 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு கிடைக்கப் பெற்றிருந்தாலும், அதில் கணிசமான அளவு பிரசார மற்றும் ஏனைய செயற்பாடுகளுக்காக மீண்டும் வெளிப்பாய்ச்சப்பட்டுள்ளது.

அவ்வாறான நிலையில், மத்திய கிழக்குப் பணியாளர்களே அண்மைக்காலத்தில் அதிகூடிய டொலர் வருமானத்தை இலங்கைக்கு ஈட்டிக் கொடுத்துள்ளனர்.



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்