குருநாகளில் வயல் வெளிகளில் தூக்கி எறியப்பட்ட 2 நாள் குழந்தையை தத்தெடுத்த ஜெர்மன் குடும்பம்
தாயால்* *வயலில்* வீசப்பட்ட* *குழந்தையை* *தத்தெடுத்த* *ஜேர்மன்* *தம்பதியினர்*..!
வயல்வெளியில் வீசப்பட்ட சிசு - ஜேர்மன் தம்பதியால் தத்தெடுக்கப்பட்டது.கடந்த வாரம், குருநாகல் மாவட்டத்தின் பரகஹதெனிய பகுதியில் அமைந்துள்ள சிங்கபுர வீதியை ஒட்டிய வயல்வெளியில் கண்டெடுக்கப்பட்ட பிஞ்சு குழந்தை தற்போது பாதுகாப்பாகவும், நலமுடனும் இருக்கிறது. அந்த சிசு, மருத்துவமனையில் தாதியர்களின் அன்பான பராமரிப்பிலும், மருத்துவர்களின் முழுமையான கவனிப்பிலும் வளர்ந்து வருகிறது. இச்சம்பவம் ஊடகங்களில் வெளிவந்ததைத் தொடர்ந்து, இலங்கை மற்றும் வெளிநாடுகளில் இருந்து 1000க்கும் மேற்பட்ட தத்தெடுப்பு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது