ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தொடர்பில் தான் தெரிவித்த அவதூறு கருத்துக்கு நிபந்தனையற்ற வருத்தம் தெரிவிப்பதாக இலங்கை பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸகுட்டி ஆராச்சி இன்று (29) கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
10 பில்லியன் ரூபாய் இழப்பீடு கோரி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தாக்கல் செய்த அவமதிப்பு வழக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் போது தனது சட்டத்தரணிகள் மூலம் நீதிமன்றத்தில் ஆஜரான திஸ்ஸகுட்டி ஆராச்சி அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.