பாணந்துறையில் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு


 பாணந்துறை - ஹிரான பொலிஸ் பிரிவின் மாலமுல்லா பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அறையில் தூங்கிக் கொண்டிருந்த ஒருவரை குறிவைத்து இன்று (11) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள், அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் வீட்டின் ஜன்னலை உடைத்து, துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் தப்பியோட்டம் 

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

காயமடைந்த நபர் மாலமுல்ல பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேக நபர்கள் தொடர்பான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் மற்றும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்