ஏழு மாதங்களுக்குள் 31 அரசாங்க அதிகாரிகள் அதிரடியாகக் கைது


 கடந்த ஏழு மாத காலப்பகுதிக்குள் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் அரசாங்க அதிகாரிகள் 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடப்பு ஆண்டின் தற்போது வரையான ஏழு மாத காலப்பகுதிக்குள் அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகளைத் தடுப்பதற்கான விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் 44 சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

அதன் மூலம் 31 அரசாங்க அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நடப்பு ஆண்டில் மட்டும் 2138 முறைப்பாடுகள்

கைது செய்யப்பட்டவர்களில் பாடசாலை அதிபர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், தொழில் திணைக்கள உத்தியோகத்தர்கள், மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் உள்ளடங்கியுள்ளனர்.

இதற்கிடையே இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடிகளைத் தடுப்பதற்கான விசாரணை ஆணைக்குழுவுக்கு நடப்பு ஆண்டில் மட்டும் 2138 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அதனடிப்படையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.




📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்