இரத்தினபுரி - கொழும்பு பிரதான வீதியில் பஸ் விபத்து – 23 பேருக்கு காயம்


 இரத்தினபுரி - கொழும்பு பிரதான வீதியில் மீன்னான பகுதியில் பஸ்ஸுடன் லொறி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.


இன்று (18) காலை இடம்பெற்ற இவ்விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 இவ்விபத்தால் கொழும்பு - இரத்தினபுரி பிரதான வீதியில் போக்குவரத்து தடைபட்டது. விபத்தில் காயமடைந்தவர்கள் எஹெலியகொட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


இவ்விபத்து தொடர்பில் எஹெலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்