எரிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு


 கல்கிஸ்ஸை, ஹுலுடகொட பகுதியில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில், ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கல்கிஸை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்தக் கொலை சம்பவம் தொடர்பில் விசாரணைக்காக இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு ஒரு முச்சக்கர வண்டியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.


இரத்மலானை மஹிந்தராம வீதியில் வசித்து வந்த 23 வயதுடைய கவிந்த கயாஷன் ரணவக்க என்ற டிகிரா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இறந்தவரின் தாயார், தனது மகனைக் காணவில்லை என்று கல்கிஸை பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.


குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கல்கிஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்