இணையத்தளம் ஊடாக மோசடியில் ஈடுபட்ட இளைஞன்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

 

இணையத்தளம் ஊடாக அறிமுகமான வர்த்தகர் ஒருவரிடமிருந்து மூன்று கோடி ரூபாயை மோசடி செய்த இளைஞர் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு- தெமட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

விளக்கமறியல்

இணையத்தளம் மூலம் அறிமுகமான காலி, பட்டேபொல பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடமிருந்து குறித்த இளைஞர் புதிய வர்த்தகமொன்றை ஆரம்பிக்கும் ஆசை காட்டி மூன்று கோடி ரூபாயை ஏமாற்றியுள்ளார்

இது தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை அடுத்து குறித்த இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.

அதனையடுத்து நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் நாளைய தினம் (2) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.




📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்