மின் கட்டணம் அதிகரிக்கப்படும் வரை சர்வதேச நாணய நிதியக் கடன் தவணை இல்லை!


 இலங்கையில் மின் கட்டணத்தை அதிகரிக்கும் வரை சர்வதேச நாணய நிதியத்தின் ஐந்தாம் தவணைக் கடன் கொடுப்பனவு வழங்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உற்பத்திச் செலவை ஈடுகட்டும் வகையிலான மின்கட்டண அதிகரிப்பு குறித்து சர்வதேச நாணய நிதியம் பல தடவைகள் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது. அரசாங்கமும் அதனை ஏற்றுக் கொண்டிருந்தது

கடன் கொடுப்பனவு 

கடந்த ஏப்ரலுக்குள்ளாக மின்கட்டண அதிகரிப்புக்கு திகதி குறிக்கப்பட்டிருந்தது. எனினும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை முன்னிட்டு மின்கட்டண அதிகரிப்பை அரசாங்கம் பிற்போட்டதன் காரணமாக சர்வதேச நாணய நிதியத்தின் ஐந்தாம் தவணைக் கடனை விடுவிப்பதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது

எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள்ளாக மின் கட்டண அதிகரிப்பிற்கான அறிவிப்பை வௌியிட அரசாங்கம் எதிர்பார்த்துள்ள நிலையில், அதன் பின்னரே சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தவணை விடுவிக்கப்படும் என்று மத்திய வங்கியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச நாணய நிதியத்தின் ஐந்தாம் தவணைக் கடன் தொகையாக 344 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்