அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம், விடுத்த அழைப்புக்கு இணங்க, இலங்கை தூதுக்குழு வோசிங்டனில் விரைவில் நடைபெறும் கலந்துரையாடல்களில் பங்கேற்கவுள்ளது.
இந்தநிலையில், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கான, இரண்டாவது நேரடி சந்திப்பாக இது அமையவுள்ளது.
இலங்கை குழு
தற்போதைய பொருளாதார முன்னுரிமைகளின் அடிப்படையில், வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் இலங்கைக்கு சாதகமான விளைவுகளைப் பெறுவதற்கும் இதன்போது எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னோடியாக, குறித்த தூதுக்குழுவினர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்துள்ளனர்.