கொழும்பில் என்.பி.பி. ஆட்சியமைக்க பிரபா கணேசனின் கட்சி நேசக்கரம்!


 பிரபா கணேசன் தலைமையிலான ஜனநாயகத் தேசிய கூட்டணி தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பதாகச் செயற்குழுக் கூட்டத்தில் ஏகமானதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகத் தேசியக் கூட்டணியின் செயற்குழுக் கூட்டம் அதன் தலைவர் பிரபா கணேசன் தலைமையில் பம்பலப்பிட்டி தலைமைக் காரியாலயத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.

நேசக்கரம்

இதன்போது கொழும்பு மாநகர சபையில் ஜனாதிபதி தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பதாக ஏகமானதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகத் தேசியக் கூட்டணிக்கு கொழும்பு மாநகர சபை உட்பட கிடைக்கப் பெற்ற பத்து ஆசனங்கள் மக்களின் அபிவிருத்திக்காகவே பயன்படுத்தப்படும் என்றும், அரசு மக்கள் விரோதச் செயற்பாடுகளை முன்னெடுத்ததால் ஆதரவை வாபஸ் வாங்கத் தயங்க மாட்டோம் என்றும் ஜனநாயகத் தேசியக் கூட்டணியின் தலைவர் பிரபா கணேசன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.




📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்