சட்டவிரோத மருந்து இறக்குமதி தொடர்பில் சிறப்பு விசாரணை

 

அரசாங்கத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பை ஏற்படுத்திய மற்றும் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திய ஹியூமன் இம்யூனோகுளோபுலின் மருந்து பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக பரிசீலிக்க சட்டமா அதிபரால் மூன்று நீதிபதிகள் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான மருந்து  பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக நியமிக்கப்பட்ட மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவில் மஹேன் வீரமன், அமலி ரணவீர மற்றும்  பிரதீப் அபேரத்ன ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர்.

சட்டமா அதிபர் திணைக்களம்

இருப்பினும், சம்பந்தப்பட்ட குழுவில் உள்ள மஹேன் வீரமன் செப்டம்பரில் ஓய்வு பெற உள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நீதிபதி மஹேன் வீரமன் பதவி விலகவுள்ளமை குறித்து தலைமை நீதிபதிக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.




📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்