இலங்கை கிரிக்கெட் வீரர் அஷேன் பண்டார கைது

இலங்கை கிரிக்கெட் வீரர் அஷேன் பண்டார பிலியந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


பிலியந்தலை கொல்லமுன்ன பிரதேசத்தில் வசிக்கும் அஷேன் பண்டார, மற்றொரு நபரின் வீட்டினுள் புகுந்து தாக்குதல் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.


அஷேன் பண்டார தனது வீட்டுக்கு அருகிலுள்ள ஒருவருடன், வீதியை மறிக்கும் வகையில் காரை நிறுத்தியதற்கு பிறகு, ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அஷேன் பண்டார, பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 12ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளார்.





📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்