உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை சமர்ப்பிக்கும் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் மார்ச் 12 ஆம் திகதி நள்ளிரவு வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு – அறிக்கையொன்றின் ஊடாக இதனைத் தெரிவித்துள்ளது.
‘அஞ்சல்மூலம் வாக்களிக்க எதிர்பார்க்கின்ற, அதற்குத் தகைமை பெற்ற அரச அலுவலர்களுக்கு/ பாதுகாப்புப் பிரிவு அலுவலர்களுக்கு விடுக்கப்படும் அறிவித்தல்’ எனும் தலைவர்பில், தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்கவின் கையொப்பத்துடன் மேற்படி அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலம், தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை, மாவட்ட தேர்தல்கள் அலுவலகங்களிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். அல்லது தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் (www.elections.gov.lk) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.