திருமண நிகழ்விற்கு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி: மர்ம முறையில் இரு மரணங்கள்..!


 காலி - படபொலவில் உள்ள ஓடை ஒன்றுக்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்த இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன், கரந்தெனிய பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என அவரது தாயாரால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

படபொல பகுதியில் ஒரு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக அந்த இளைஞன் கடந்த 16ஆம் திகதி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்

பொலிஸில் முறைப்பாடு 

இருப்பினும், அவர் வீடு திரும்பாத நிலையில் அது குறித்து அவரது தாயார் பொலிஸில் முறைப்பாடு அளித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையிலே, குறித்த சடலம் மீட்கப்பட்டு அந்த தாயால் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், வாதுவ கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்த மற்றொரு நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக வாதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். 



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்