மேலதிக வாகுப்புகளுக்கு தடை - பரிட்சைகள் திணைக்களம்
க.பொ.த சாதாரண தர மேலதிக வகுப்புகள் மார்ச் மாதம் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடைசெய்யப்பட்டுள்ளன. இலங்கை பரீட்சைகள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் 2024 க.பொ.த (சா/த) பரீட்சையுடன் தொடர்புடைய அனைத்து மேலதிக கல்வி வகுப்புகள், கருத்தரங்குகள்,, சமூக அல்லது பிற இலத்திரனியல் ஊடகங்களின் உதவிகள் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளன
அதே வேளை 2024 க.பொ.த (சா/த) பரீட்சை எதிர்வரும் மார்ச் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.