நிந்தவூர் பதில் தவிசாளராக சட்டத்தரணி இர்பான்

 



நிந்தவூர் பிரதேச சபையின் பதில் தவிசாளராக நியமிக்கப்பட்ட  சட்டத்தரணி எம்.ஐ.எம்.இர்பான் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளராக இருந்து வந்த அஸ்பர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து வெற்றிடமாகவுள்ள தவிசாளர் பதவிக்கு பிரதித் தவிசாளராக கடமையாற்றி வந்துள்ள சட்டத்தரணி எம் ஐ. இர்பான் பதில் தவிசாளராக உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டார்.

பதில் தவிசாளராக நியமிக்கப்பட்ட சட்டத்தரணி எம்.ஐ.இர்பான்  இன்று காலை தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந் நிகழ்வில்  பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.றஸீன் .பிரதேச சபையின் செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்