அட்டாளைச்சேனை கொச்சிக்காய்ச்சேனையில் இருவர் இலஞ்சம் பெறும்போது கைது

 


(எஸ்.எம்.அறூஸ்)

கொச்சிக்காய்ச்சேனை விவசாய அமைப்பினர், வயல்வெளியில் உள்ள வாய்க்கால்களை அகழ்ந்து துப்பரவு செய்வதற்காக, அக்கரைப்பற்றில் அமைந்துள்ள நீர்ப்பாசன திணைக்களத்திற்குச் சொந்தமான Excavator இயந்திரத்தை மூன்று நாட்களாக இலவசமாக பெற்று வேலைகளை செய்து வந்துள்ளனர். 

ஒவ்வொரு நாளும் வேலை ஆரம்பிக்கும் போது 41 லீற்றர் எரிபொருள் விவசாய அமைப்பினரால் வழங்கப்பட்டும், வேலை முடிவடைந்து செல்லும் போது, மேலதிக எரிபொருள் செலவு எனக்கூறி  Excavator சாரதி 13,000.00 ரூபா பணத்தை குறித்த விவசாய அமைப்பிடமிருந்து பெற்று வந்துள்ளார்.

மூன்றாவது நாளான இன்றைய தினமும் வேலை முடிந்து செல்லும் போது  13,000.00 ரூபா பணத்தை பெறும் போது சாரதியும் நீர்ப்பாசன திணைக்கள காரியாலய உதவியாளரும் இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவினரால் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பானமையைச் சேர்ந்தவர் என தெரியவருகிறது.



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்