எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்காக, ஐக்கிய மக்கள் சக்தியின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக தயாராக இருப்பதாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கட்சியின் வெற்றியை உறுதி செய்வதற்காக தமது பதவிகளைத் தியாகம் செய்ய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராக உள்ளனர் என்றும் இதன் மூலம், மாகாண சபைத் தேர்தலை கட்சி எந்த அளவுக்கு தீவிரமாக எடுத்துக்கொள்கிறது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.