நீரில் மிதந்தவாறு இரு சடலங்கள் மீட்பு




கும்புக்கெட்டே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெட்டிகம பகுதியிலுள்ள கிம்புல்வா ஓய மண்டலபல பாலத்துக்கருகில் சடலம் ஒன்று மிதந்தவாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது.


உயிரிழந்தவர் ஹெட்டிகம, கும்புக்கெட்டே பகுதியைச் சேர்ந்த 80 வயதானவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. 


குறித்த நபர் நீரில் மூழ்கி உயிரிழந்தவரா அல்லது வேறு ஏதேனும் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்தவரா என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 


இதேபோல் பல்லேகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திறந்தவெளி சிறைச்சாலை முகாமுக்கு அருகிலுள்ள விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மிதந்தவாறு காணப்பட்ட ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 


பார்பர் வத்த, குன்னேபான பகுதியைச் சேர்ந்த 63 வயதானவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார். 


உயிரிழந்தவரின் சடலம் கண்டி வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 


சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்