கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் நடத்துனர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.
இன்று (21) காலை காலியில் வைத்து அவர் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த தனியார் பேருந்தின் ஓட்டுநர், அந்த நேரத்தில் இலங்கை போக்குவரத்து சபை நடத்துனரைத் தாக்க முயன்றுள்ளார் ஆனால் பேருந்தில் பயணித்த பயணிகளின் தலையீடு காரணமாக அவர் தடுக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும், இலங்கை போக்குவரத்து சபை பேருந்து காலிக்கு வந்து பயணிகளை இறக்கிவிட்டபோது, முச்சக்கர வண்டியில் வந்த தனியார் பேருந்தின் ஓட்டுநர் நடத்துனரைத் தாக்கியுள்ளார்.
அந்த நேரத்தில், இலங்கை போக்குவரத்து சபை ஓட்டுநர் காயமடைந்த நடத்துனரை பயணிகளுடன் பேருந்தில் இருந்து காலி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.