போதைப் பொருள் மற்றும் மதுபானப் பாவனைக்கு அடிமையாகியுள்ள பொலிசாருக்கு எதிராக ஆரம்பத்தில் திணைக்கள ரீதியான விசாரணைகள் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

 



ஆரம்ப கட்டமாக பொலிஸ் மருத்துவமனை மற்றும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் பரிசோதனைக்கு அனுப்பப்படவுள்ளனர்.

அவ்வாறானவர்களை துரிதமாக இனம் கண்டுகொள்வதற்கான வேலைத்திட்டமொன்று தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.


சேவையில் இருந்து இடைநீக்கம் 

போதைப்பொருள் மற்றும் மதுபானத்துக்கு அடிமையானவர்களாக இனம் காணப்பட்டுள்ள பொலிசாரை ஆரம்ப கட்டமாக பொலிஸ் மருத்துவமனை மற்றும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் பரிசோதனைக்கு அனுப்பப்படவுள்ளனர்.

அதன்பின்னர் அவ்வாறானவர்களை பொலிஸ் சேவையில் இருந்து இடைநீக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் அடுத்த கட்டமாக ஒவ்வொரு பொலிஸ் நிலையம் ரீதியாக அவ்வாறானவர்களை இனம் காண்பதற்கான பரிசோதனைககள் முன்னெடுக்கப்படவுள்ளது.



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்