ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்கூட்டியே அறிந்திருந்த பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தொடர்பிலான தகவல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்
நாடாளுமன்றத்தில் குறிப்பிட்ட தகவல்கள்
தொடர்ந்து தெரிவித்த அவர் நீதிமன்றத்தின் ஆலோசனை மற்றும் சட்ட மா அதிபரின் ஆலோசனைகளின் பின்னர் மேலதிக விசாரணை நடைபெறும்.
எனவே இது தொடர்பில் விசாரணைகள் நடைபெறுகின்றன.
நாம் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையிலே விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
ஏனைய விசாரணைகள் தொடர்பில் இச்சந்தர்ப்பத்தில் ஊடங்களுக்கு தெரிவிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.