பரபரப்பாகும் தென்னிலங்கை - சிக்கப் போகும் 488 மோசடியாளர்கள்


 சர்ச்சைக்குரிய 488 கோப்புகள் குறித்து விசாரணைகளை இலஞ்ச ஊழல் மற்றும் ஒழிப்பு ஆணைக்குழு ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உயர் பதவியில் உள்ள அரசியல்வாதிகள், முன்னாள் மூத்த அரசு அதிகாரிகள் மற்றும் பல்வேறு குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்ட பிற நபர்கள் தொடர்பான விசாரணைகளே இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த முறைப்பாடு ஜனாதிபதி செயலகம், பல்வேறு அமைச்சுகள் மற்றும் இலஞ்ச ஊழல் மற்றும் ஒழிப்பு ஆணையத்திற்கு நேரடியாக கிடைத்துள்ளதென தகவல் வெளியாகியுள்ளது.

மூத்த அதிகாரிகள்

அவற்றில் சிலவற்றிற்கு சட்டமா அதிபரின் உதவியும் பெறப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது

இந்த விசாரணைகளுக்கு இலஞ்ச ஊழல் மற்றும் ஒழிப்பு ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்