பொலிஸ் பிரிவில் தற்போது 28,000 வெற்றிடங்கள்


 பொலிஸ் பிரிவில் தற்போது 28,000 வெற்றிடங்கள் இருப்பதாகத் பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர்

ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.


இன்று (08) பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், தற்போது பொலிஸ் அதிகாரிகள் பற்றாக்குறை இருப்பதாகக் கூறியுள்ளார்.


அதன்படி, பொலிஸ் சேவையில் 5,000 வெற்றிடங்களை அவசரமாக ஆட்சேர்ப்பு செய்வதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப அதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


உப பொலிஸ் பரீசோதகர் பதவிக்கு தற்போது விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாகவும், 5,000 கீழ்நிலை பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறினார்.


இதற்கிடையில், விசாரணையிலுள்ள 1,500 அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் குறிப்பிட்டுள்ளார்.



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்