கற்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் மின்ஹாஜ், நேற்று(09) முன்னிரவில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கற்பிட்டி பிரதேச பல்நோக்கு கூட்டுறவு சங்க உத்தியோகத்தர் ஒருவரின் கடமையை செய்யவிடாது அழுத்தம் கொழுத்ததாக அவருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அதனையடுத்து, அரசாங்க ஊழியரின் கடமையில் குறுக்கீடு மேற்கொண்ட குற்றச்சாட்டில் நுரைச்சோலை பொலிஸார் மின்ஹாஜை கைது செய்துள்ளனர்.
தவிசாளர்
இவர் கடந்த 2012ஆம் ஆண்டளவில் கற்பிட்டி பிரதேச சபையின் தவிசாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.