ஈரானின் போர்டோ அணுஉலை மீது இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா நேற்று (22) தாக்குதலை மேற்கொண்டிருந்த நிலையிலேயே இன்று மீண்டும் இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிற்கு ஆபத்தில்லை என அதிகாரிகளை மேற்கோள்காட்டி தஸ்னிம் செய்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது.
அத்தோடு ஈரான் தலைநகரில் உள்ள எவின் சிறைச்சாலை மற்றும் துணை இராணுவப் புரட்சிகர காவல்படையின் பாதுகாப்பு தலைமையகம் உள்ளிட்ட இலக்குகளைத் தாக்கியதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரகம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது