விபத்தை உறுதி செய்தது எயார் இந்தியா விமான நிறுவனம்


 குஜராத் மாநிலம் அஹமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு இன்று பிற்பகல் 1.30 மணிக்கு புறப்பட்ட எயார் இந்தியா விமானம் சிறிது நேரத்தில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

 


 இதேவேளை விமானம் விபத்தில் சிக்கியதாக எயார் இந்தியா நிறுவனம் உறுதிசெய்து பதிவிட்டுள்ளது.


 அப்பதிவில் தெரிவித்திருப்பதாவது:

அஹமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் விமான நிலையத்துக்கு புறப்பட்ட எயார் இந்திய AI171 விமானம் இன்று விபத்தில் சிக்கியதை ஏர் இந்தியா உறுதிபடுத்துகிறது.

 

 


அஹமதாபாத்தில் இருந்து பிற்பகல் 13.38 மணிக்கு புறப்பட்ட போயிங் 787-8 ரக விமானத்தில் 242 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர்.

 

 


இவர்களில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டன் நாட்டவர்கள், ஒரு கனடா நாட்டவர் மற்றும் 7 பேர் போர்த்துக்கேய நாட்டவர் ஆவர்.

 

 


இந்த சம்பவம் குறித்து விசாரிக்கும் அதிகாரிகளுக்கு எயார் இந்தியா முழு ஒத்துழைப்பையும் அளிக்கிறது.” எனக் குறிப்பிட்டுள்ளது.

 

 



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்