மகளை அழைக்க சென்ற தந்தைக்க நேர்ந்த துயரம்


 காலி, வாதுவ பகுதியில் மேலதிக வகுப்பிலிருந்து மகளை அழைத்து வரச் சென்ற தந்தை ஒருவர் கார் மோதி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் வாதுவ மகாவிஹார பகுதியை சேர்ந்த 44 வயதுடைய சுது தேவகே லலித் துஷார என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த நபர் பாணந்துறையிலிருந்து களுத்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, ​​பின்னால் வந்த கார் அவர் மீது மோதி காலி வீதியில் உள்ள மின்கம்பத்தில் மோதியது.

மேலதிக விசாரணை

காரில் மோதிய நபர் சுமார் 20 மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்