ஒரு வெள்ளைப் புறா குடை பிடிக்கின்றது!

 

ஒரு வெள்ளைப் புறா

குடை பிடிக்கின்றது!


அதை ! 

கொள்ளை மழை

கொஞ்சம் நனைக்கின்றது!

சிறு சாரல் பட

அவள் மேனி தெரிகின்றது!


அட அதைப் பார்த்து

என் நெஞ்சு கொதிக்கின்றது!


வரும் நாளெல்லாம்

விழி மூட மறுக்கின்றது!


மனம் நிலையின்றி

தட தடத்து துடிக்கின்றது!


அவள் உடல் பட்டுத்

தொடும் காற்று இம்சிக்குது!


என் செய்வது

நான் இயல்பாயில்லை!


அந்த தேவதையை

தினம் இரசித்திடவே

மனப் பறவைத்

தன் சிறகுகளை விரிக்கிறது!


சிறு பொழுதாகிலும்

அவளோடுதான்

வாழ்ந்து பின் சாகத்தான்

எண்ணம் விளைகின்றது!



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்