பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நீரில் மூழ்கி பலி

 

யாழை சேர்ந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஹெப்பற்றிக்கொலாவ பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஓட்டுமடத்தினை சேர்ந்த 34 வயதுடைய முகுந்தன் என்ற பொலிஸ் விசேட பிரிவினை சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஹெப்பற்றிகொலாவ பகுதியில் உள்ள குளம் ஒன்றில் நேற்று (8) நீராட சென்றவேளை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

தமிழர் பகுதி

சுமார் பத்து ஆண்டுகளாக பொலிஸ் விசேட பிரிவில் கடமையாற்றி வந்த இவர் தமிழர் பகுதிகளிலும் கடமைகளில் ஈடுபட்டுவந்துள்ளார்.

இவரது உடலம் ஹெப்பற்றிகொலாவ மருத்துவமனையில் பிரதேச பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்