ரஷ்யா, ஒரே நாள் இரவில் 300-க்கும் அதிகமான ட்ரோன்களை ஏவி உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
அணிவகுத்த ட்ரோன்கள் குறித்து உக்ரைன் இராணுவ தரப்பு கூறும்போது, "உக்ரைனின் யூரி இஹ்நாட் தலைமை விமானப்படை தளத்தை குறி வைத்து நேற்று இரவு (26) ரஷ்யா 355 ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது. இது மூன்றாண்டு கால போரில் இதுவரை இல்லாத தீவிர தாக்குதலாகும். இதில் சிலர் காயம் அடைந்துள்ளனர். உயிர்ப்பலி குறித்த தகவல்கள் உடனடியாக தெரியவில்லை." என்று கூறி உள்ளது.
ட்ரோன் தாக்குதலுக்கு முதல் நாள் ரஷ்யா 9 ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தி இருந்தது. அதற்கும் முந்தைய நாள் ரஷ்யா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலில் 12 உக்ரைனியர்கள் கொல்லப்பட்டனர்.