வயல் பகுதியிலிருந்து சடலம் மீட்பு


 மட்டக்களப்பு  எருவில்  பகுதியில்  நேற்று (26) மாலை வயல் பகுதியிலிருந்து ஆணொருவர்  சடலமாக மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

 இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் எருவில் கிராமத்தை சேர்ந்த 44 வயதுடைய இரத்தினசிங்கம் உத்தமன்  என  அடையாளர் காணப்பட்டுள்ளார்.

 

 

 குறித்த நபர் தனது வயலுக்குள் வேளாண்மையினை பார்ப்பதற்காக துவிச்சக்கரவண்டியில் சென்று துவிச்சக்கர வண்டியை குளக்கட்டில் வைத்துவிட்டு வயலுக்குள் இறங்கி தனது வேளாண்மைச் செய்கையை பார்வையிட்டுள்ளார்.

 


அப்போது அவருக்கு ஏற்பட்ட உபாதை காரணமாக வயலுக்குள்ளேயே மரணம் அடைந்திருக்கலாம் என உறவினர்கள் தெரிவித்தனர்.

 

 

 குறித்த மரணம்  தொடர்பாக களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் திடீர் மரணவிசாரணை அதிகாரி வி.ஆர்.மகேந்திரன், சடலத்தை பார்வையிட்டு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுமாறு உத்தரவிட்டுள்ளார்.

 

 

 

சடலம் மீது  மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனை முடிவுகளின்படி மாரடைப்பு காரணமாக குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்பு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 


(மட்டக்களப்பு செய்தியாளர்)  

 



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்