பேச்சுவார்தைக்காக அமெரிக்கா சென்றுள்ள குழு: ஜனாதிபதி கூறிய தகவல்

 


அமெரிக்காவின் புதிய வரி தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிரதி நிதி அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் அமெரிக்கா சென்றுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தம்புள்ளையில் நேற்று(20.04.2025) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“உலகை நாம் விரும்பியவாறு கட்டுப்படுத்த முடியாது என்பதோடு ஏனைய நாடுகளின் பொருளாதார தீர்மானங்களில் நாம் செல்வாக்கு செலுத்த முடியாது. 

அசைக்க முடியாத ஒரு பொருளாதாரம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வரி விதித்ததும் அமெரிக்கர்கள் மகிழ்ச்சியடைந்தனர். தற்போது அவர் வரிகளை மூன்று மாதங்களுக்கு ஒத்தி வைத்துள்ளார்.

இது போன்ற எந்தவித தடைகளாலும் அசைக்க முடியாத ஒரு பொருளாதாரத்தை உருவாக்கவே நாம் முயற்சிக்கின்றோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.




📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்