ஹரக் கட்டாவிடம் இருந்து சிறைக்குள் கைப்பற்றப்பட்ட தொலைபேசி

 

பிரபல போதைப் பொருள் வர்த்தகரான ஹரக் கட்டா என்றழைக்கப்படும் நந்துன் சித்தக சிறைக்குள் பயன்படுத்திய மொபைல் போன் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைக்குள் இருந்த ஹரக் கட்டா, தற்போதைக்கு பயங்கரவாத தடுப்புப் பிரிவின் கண்காணிப்பின் கீழ் தங்காலை பழைய சிறைச்சாலையில் பலத்த பாதுகாப்புடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்

பலத்த பாதுகாப்பு மற்றும் தீவிர கண்காணிப்பில் 

இந்நிலையில் அவரது சிறைக்கூடத்திற்குள் இருந்து மொபைல் போன் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இருக்கும் ஒரு கைதிக்கு மொபைல் போன் எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பில் தற்போதைக்கு தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே ஹரக் கட்டாவிடம் இருந்து மொபைல் போன் கைப்பற்றப்பட்ட சம்பவம் கேள்வியுற்றதும் அவருக்கு எதிராக சாட்சியங்களை அளித்தவர்கள் அச்சமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஹரக் கட்டா சிறைக்குள் இருந்து கொண்டே தங்களைத் தீர்த்துக் கட்டிவிட வழி செய்யக்கூடும் என்றே அவர்கள் அச்சம் கொண்டுள்ளதாகவும் அறியக் கிடைத்துள்ளது.



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்