100 வீத வருகையை பதிவு செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்

 

2025 பெப்ரவரி 17 முதல் மார்ச் 21 வரை நடைபெற்ற அனைத்து 27 வரவு செலவுத் திட்ட அமர்வுகளிலும் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே 100வீத வருகையைப் பதிவு செய்துள்ளனர்.

அவர்களில், பிரதமர் ஹரினி அமரசூரிய, அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலிஹ் ஆகிய மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களாவர்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள்

மீதமுள்ள 7 பேர் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள்.

டி.வி. சானக, தயாசிறி ஜயசேகர, திலித் ஜயவீர, கயந்த கருணாதிலக, ஹேஷா விதானகே, கே. சுஜித் சஞ்சய பெரேரா, மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோர் 100 வீத வருகையை பதிவு செய்த எதிர்க்கட்சி உறுப்பினர்களாவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்