ஹமாஸ் படைகளை மீளப்பெறவேண்டும் : இஸ்ரேல் நிபந்தனை

ஹமாஸ் படைகளை மீளப்பெறவேண்டும் : இஸ்ரேல் நிபந்தனை



காஸாவில் போர் நிறுத்தத்தை இரண்டாவது கட்டத்துக்கு நீடிக்க வேண்டுமென்றால் அந்தப் பகுதியிலிருந்து ஹமாஸ் அமைப்பு தங்களது படைகளை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும் என்று இஸ்ரேல் நிபந்தனை விதித்துள்ளது.

 


இது குறித்து இஸ்ரேலின் வெளியுறவுத் துறையமைச்சா் கூறுகையில்,


‘போர் நிறுத்த நீடிப்புப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமானால் காஸா பகுதி படைகளற்ற பகுதியாக மாற்றப்பட வேண்டும்’ என்றார்.

 

எனினும், ‘காஸா அமைதிப் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்று ஹமாஸ் அமைப்பிடமோ பிற போராட்டக்குழுக்களிடமோ கூறுவது எல்லை மீறிய நிபந்தனை’ என்று ஹமாஸ் அமைப்பின் தலைவா் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

 

இந்த நிலையில்,  இஸ்ரேல் -      ஹமாஸ்இடையேபோர் நிறுத்தத்தை நீடிப்பதற்கு இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சா் விதித்துள்ள நிபந்தனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



📢 உங்கள் பிரதேச நிகழ்வுகளையும் செய்திகளையும் எமக்கு அனுப்ப: Makkeen12@gmail.com

📞 உங்கள் விளம்பரங்களை எமது தளத்தில் பிரசுரிக்க அழைக்கவும்: +94 776 770 839

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். ஏதேனும் புகார்களுக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும் - ஆசிரியர்